ம.ந.கூட்டணி குறித்து தா.பாண்டியன் கூறியது அவரது சொந்த கருத்து: ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்
ம.ந.கூட்டணி குறித்து தா.பாண்டியன் கூறியது அவரது சொந்த கருத்து என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி: மக்கள் நலக் கூட்டணி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியது அவரது சொந்த கருத்தாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நிலைகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மக்கள் நலக் கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் அந்த அணியில் உள்ளாரே என மீண்டும் கேள்வி எழுப்பியபோது, தான் மக்கள் நலக் கூட்டணியின் தொடக்கத்தில் இருந்தே எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பதால், அந்தக் கூட்டணி உள்ளதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என பதிலளித்தார் தா.பாண்டியன்.
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மக்கள் பிரச்சனைகளுக்காக தற்போது மக்கள் நலக் கூட்டணி கூட்டு இயக்கமாக செயல்படுகிறோம். தேர்தல் நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியாக செயல்பட்டோம் எனத் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் டிச.6ல் விசிக நடத்தும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும், மக்கள் நலக் கூட்டணி குறித்து தா.பாண்டியன் கூறியது அவரது சொந்த கருத்து எனவும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications