தேர்தல் நடத்தை விதிமீறல்: அமைச்சர் வளர்மதி மீது தேர்தல் அலுவலரிடம் திமுக மனு

Subscribe to Oneindia Tamil

சேலம்: திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை தனிப்பட்ட முறையில் திட்டிய அமைச்சர் வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட திமுகவினர், தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தி.மு.க.,வின் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கண்காணிப்பாளர் ஆர்.டி.ஓ., விஜய்பாபுவை சந்தித்து அமைச்சர் வளர்மதி மீது புகார் கொடுத்தார்.

 complaint filled against admk minister valarmathi

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 17-ந் தேதி சேலம் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி பேசினார். அவர் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறும் வகையில் பேசி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி அவதூறாக பேசி உள்ளார். அவன், இவன், சில்லரை, தேவாங்கு, சோளக்காட்டு பொம்மை போன்ற அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.

தேர்தல் விதிமுறைகளின்படி ஒருவரை பற்றி அநாகரீகமாக பேசக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அமைச்சர் வளர்மதி தேர்தல் விதிகளை மீறி பேசி உள்ளார். அவர் பேசியதற்கான சி.டி. ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+