கம்பம் அருகே கோவில் திருவிழாவில் திடீர் மோதல்.. இசைக்கருவியால் தாக்கிக்கொண்டதால் பதற்றம் - வீடியோ
கம்பம் அருகே கோவில் திருவிழாவில் இளைர்களும் இசை வாத்திய குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.
Subscribe to Oneindia Tamil
கம்பம்: ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது, ஆனால் திருவிழாவின் போது இளைஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் தீச்சட்டி சுமந்தும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

அப்போது திடீரென சில இளைஞர்களுக்கும் இசை வாத்தியக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் தங்களின் இசைக்கருவிகளைக் கொண்டே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் திருவிழாவை காணவந்த பக்தர்கள் நான்கு புறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications