ஆதரவு கோரி ஏர்போர்ட்டில் அழகிரியைச் சந்தித்த காங். வேட்பாளர்..
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு கோரி அழகிரியைச் சந்தித்தார் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர்.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து விட்டு தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு, அழகிரியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் படி அவர் கோரினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருள் அன்பரசு, ‘லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி அழகிரியிடம் கோரினேன்' என்றார். மேலும், அழகிரி மீது தி.மு.க எடுத்த நடவடிக்கை தற்காலிகமானதே என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications