கட்சிக்காரங்க ஆதரவே வேண்டாம்.. இது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் விரக்தி!
கரூர்: லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உட்பட நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு காட்டி வருவதால் விரக்தியில் இருக்கிறாராம் வேட்பாளர் ஜோதிமணி.
கரூர் தொகுதியில் டெல்லி மேலிட செல்வாக்கில் சீட் வாங்கிவிட்டார் ஜோதிமணி. அத்துடன் தொகுதியில் கடந்த சில நாட்களாக வேட்பாளர் அறிமுக கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
ஆனால் கரூர் தொகுதி தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குடைச்சல் தாங்க முடியாமல் பெரும் குழப்பத்தில் தவித்து வருகிறார் ஜோதிமணி.

ரூ2,500 வைத்து என்ன செய்ய?
இதை வெளிப்படையாக காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்திலும் பேசி வருகிறார். கரூர் தாந்தோணி மலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜோதிமணி, என்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது என்று கொந்தளித்திருக்கிறார்.

பேங்க் சுப்பிரமணி மீது நடவடிக்கை
இதை கேட்ட நகர காங்கிரஸ் தலைவர் சுப்பன் ஜோதிமணியிடம் இருந்து மைக்கை பறித்தார். உடனே ஜோதிமணி இதற்கெல்லாம் காரணம் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தான், மேலிடத்தில் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வைக்கிறேன் என்றார்.

அடிதடி
இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் என்பவருக்கும் ஜோதிமணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடியாகிப் போனது.

ஆதரவே இல்லாமல் நிற்கிறேன்..
இப்போது எனக்கு மாவட்ட காங்கிரஸ் ஆதரவே வேண்டாம்.. அவர்களது ஆதரவே இல்லாமல் நான் தேர்தலை சந்தித்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே புலம்பி வருகிறாராம் ஜோதிமணி.












Click it and Unblock the Notifications