சட்டசபையில் எப்படி பேசனும் ? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை: சென்னையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டசபையில் என்ன பிரச்சினைகளை எழுப்புவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
நாளை தமிழக சட்டசபை கூட இருக்கிறது. இதற்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே கூட்டம் போட்டு விவாதிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நாளை சட்டசபை தொடங்க உள்ளதால் அங்கு செயல்படும் விதம் குறித்தும், எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சட்டசபையில் ஆளுநரின் ஆய்வு, ஓகி புயல் பாதிப்பு, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.