காங்கிரஸ் டெபாசிட் இழக்க போவது உறுதி - தமிழருவி மணியன் பேச்சு
தூத்துக்குடி: காஙகிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி லோக் சபா தொகுதி மதிமுக வேட்பாளர் ஜோயாலை ஆதரித்து காந்திய மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகரில் பொது கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு தமிழருவி மணியன் பேசியதாவது:
உலகின் பெரும் பாலான நாடுகளில் தமிழர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களிடம் வைகோவுக்கு தனி மரியாதை உண்டு. ஜெயலலிதா செய்த தவறை ஸ்டாலின் பட்டியலிட்டு காட்டுகிறார். இது மாநில தேர்தல் அல்ல. 2016 தேர்தலுக்கு சொல்ல வேண்டியவற்றை லோக் சபா தேர்தலுக்கு சொல்லுகிறார்.

தற்போது நடைபெறும் தேர்தலில் மோடியா, அல்லது ராகுலா என்ற கேள்விதான் எழ வேண்டும். காங்கிரஸ் இந்த தடவை படுதோல்வி அடைய போவது உறுதி. பிஜேபி கூட்டணிக்கு 280 இடங்கள் கிடைக்கும்.
தமிழகத்தில் 40 தொகுதியை வைத்து கொண்டு ஜெயலலிதா பிரதமராக முடியாது. 3வது அணி அமைக்க முடியாது. அப்படி அமைத்தால் யார் பிரதமராவது என்ற சண்டை தான் வரும். பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுவது உள்பட பல அம்சங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கூட்டணி முறன்பாடா கூட்டணி என்று சிலர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 24 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்து குடும்பங்களின் வாழ்க்கையில் விளையாடும் அரசு நமக்கு தேவையில்லை. எதிர்கால தமிழக நலனில் அக்கறையுள்ள இந்த அணியை ஆதரிக்க வேண்டும்.
காமராஜர் பெயரை சொல்லி சிலர் அரசியல் செய்கின்றனர். ஆனால் அவர் கொள்கை படி அரசியல் நடத்த வில்லை. பல்வேறு பிரச்சனைகளை நாடு எதிர்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக எல்லை ஊடுருவல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. கட்டளையிட வேண்டிய இடம் மவுனமாக இருந்தால் எப்படி. அதற்கு வலிமையான மத்திய அரசு தேவை. இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications