Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுங்கச்சாவடியை நொறுக்கிய காங்கிரஸ் கட்சியினர்... மன்னிப்பு கேட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டோல்கேட் கண்ணாடியை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அடித்து நொறுக்கியதற்கு அக்கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்டதோடு தொண்டர்களை உடனடியாக கண்டித்தார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று மதுரையில் இருந்து 3 கார்களில் தொண்டர்களுடன் சென்றார். சின்னாளபட்டி சாலையில் கொடைரோட்டை அடுத்த டோல்கேட்டில் 3 கார்களும் நின்றன. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் காருக்கு கட்டண விலக்கு இருப்பதால், அவரது கார் செல்ல அனுமதிக்கப்பட்டது. மற்ற இரு கார்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் ஊழியர்கள் தெரிவித்தனர். கட்டணம் கட்ட முடியாது என தகராறு செய்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் டோல்கேட் அறை கண்ணாடியை உடைத்தார்.

Congress workers attack Toll gate near Kodai Road

ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு

இதனைக் கண்டு காரில் இருந்து இறங்கி வந்த இளங்கோவன், நீங்களே இப்படி செய்யலாமா என தொண்டரை கண்டித்ததுடன், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் மன்னித்து விடுங்கள் எனக் கூறினார். பின்னர் உடைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் வாகனங்களுக்கான கட்டணத்தை ஊழியர்களிடம் அவர் கொடுத்தார். பின்னர். அவர்களது கார்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

பாஜகவினர் அராஜகம்

முன்னதாக மதுரையில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்ற விழாவில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பாஜகவினர் ஒரு வேனில் சென்றனர்.அவர்களது வேனை கொடைரோடு 4 வழிச்சாலையில் உள்ள கட்டண வசூல் மையத்தில் ஊழியர்கள் நிறுத்தினர். ஆனால் வேனில் இருந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுத்தனர். இதனால் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களுடைய வேனுக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு உருவானது. இதையடுத்து ஊழியர்கள் அந்த வேனை அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த பரப்பரப்பு அடங்குவதற்குள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அதே இடத்தில் தகராறு செய்த சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து கட்டண வசூல் மைய ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+