சென்னையில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி பலி: 4 பேர் காயம்
சென்னை: சென்னை எழும்பூரில் லிப்ட் அறுந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார். 4 தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
எழும்பூர் எத்திராஜ் சாலையில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று 16 மாடி கட்டிடம் கட்டி வருகிறது. இந்த கட்டிட பணியில் 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கட்டிடத்தில் மேல்பகுதிக்கு செங்கல்,மணல்,சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை கொண்டு செல்வதற்காக தாற்காலிக லிப்ட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த லிப்ட் மூலம் கட்டடத்தின் மேல் பகுதிக்கு கட்டுமான பொருள்களை கொண்டு செல்லும் பணியில் தொழிலாளர்கள் புதன்கிழமை மாலை ஈடுபட்டனர்.
அப்போது அந்த லிப்ட் திடீரென அறுந்து கீழே விழுந்தது. கீழே நின்றுக் கொண்டிருந்த விபின் (20), நாகராஜ்,பிரபுலால்,ராஜ் ஆகிய தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விபின் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications