+2 "பிட்".. அரசு மாணவர்களை மட்டும் பிடித்துக் கொண்டு 7 தனியார் மாணவர்கள் விடுவித்ததால் சர்ச்சை!
கொடைக்கானல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் பிட் அடித்ததாக பிடிபட்ட 9 பேரில், தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேரை மட்டும் விடுவித்துவிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானலில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வுமையத்தில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. கொடைக்கானலில் உள்ள அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும் அந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து தேர்வு எழுதினர். தேர்வுமைய மேற்பார்வையாளராக வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் நியமிக்கப்பட்டிருந்தார்.
பள்ளிக்கு திடீரென வந்த கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் செல்வராஜ், பிட் அடித்ததாக தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 9 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றார். பின்னர் தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேரை, பள்ளி நிர்வாகத்தினர் வந்து அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மண்டல இணை இயக்குனர் கூறியதாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மண்டல இணை இயக்குனரின் இந்த செயலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களை மட்டும் விடுவித்து விட்டு, கூலித்தொழிலாளிகளின் மகன்களான அரசு பள்ளி மாணவர் மீது மட்டும் நடவடிக்கை மேற்கொண்ட இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக மாணவர்களும், பெற்றோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வு மையத்தில் நடந்த உண்மை சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டு வரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications