+2 "பிட்".. அரசு மாணவர்களை மட்டும் பிடித்துக் கொண்டு 7 தனியார் மாணவர்கள் விடுவித்ததால் சர்ச்சை!
கொடைக்கானல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் பிட் அடித்ததாக பிடிபட்ட 9 பேரில், தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேரை மட்டும் விடுவித்துவிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானலில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வுமையத்தில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. கொடைக்கானலில் உள்ள அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும் அந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து தேர்வு எழுதினர். தேர்வுமைய மேற்பார்வையாளராக வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் நியமிக்கப்பட்டிருந்தார்.
பள்ளிக்கு திடீரென வந்த கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் செல்வராஜ், பிட் அடித்ததாக தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 9 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றார். பின்னர் தனியார் பள்ளி மாணவர்கள் 7 பேரை, பள்ளி நிர்வாகத்தினர் வந்து அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மண்டல இணை இயக்குனர் கூறியதாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மண்டல இணை இயக்குனரின் இந்த செயலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களை மட்டும் விடுவித்து விட்டு, கூலித்தொழிலாளிகளின் மகன்களான அரசு பள்ளி மாணவர் மீது மட்டும் நடவடிக்கை மேற்கொண்ட இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக மாணவர்களும், பெற்றோரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வு மையத்தில் நடந்த உண்மை சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டு வரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications