அரசாங்கமே திருடுவது குற்றம்.. குற்றவாளிகள் நாடாளக் கூடாது... நடிகர் கமல்ஹாசன்
அரசாங்கமே திருடுவது குற்றம் என்றும் குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகளில் நடிகர் கமல் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகிறார்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரி சோதனை நடைபெற்றது. அங்கிருந்து பல்வேறு ஆவணங்களும், பென் டிரைவ்களும், லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ரெய்டால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் கமல் தனது டுவிட்டரில் கூறுகையில்,
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்
— Kamal Haasan (@ikamalhaasan) November 19, 2017
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே.
ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என்று குறிப்பிட்டுள்ளார்.