Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரக்கன்று நடுவதில் ரூ. 68 கோடி ஊழல்... ஜெ. அரசு ஊழல் அரசு என்பதற்கு இதுவே சாட்சி: வைகோ

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தில் ரூ. 68 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

Corruption in plantation scheme: Vaiko

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 லட்சம் மரக்கன்றுகளை நடப் போவதாக அறிவித்துள்ளனர். ஒரு மரக்கன்றின் விலை ரூ1 அல்லது 2 தான் இருக்கும். ஆனால் இவர்கள் ஒரு மரக்கன்றின் விலை ரூ.100 எனக்கூறி 68 லட்சம் மரக்கன்றுகளில் ரூ. 68 கோடி ஊழல் செய்துள்ளனர். ஜெயலலிதா அரசு ஊழல் அரசு என்பதற்கு இதுவே சான்று.

மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் எனக் கேட்டு பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.

மக்கள் நலக் கூட்டணி பற்றி நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் பேசி உள்ளதாக கேள்விப்பட்டேன். அதிமுக,வில் இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு மீண்டும் கட்சியில் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அந்த பயத்தில் தான் நத்தம் விஸ்வநாதன் ஏதோ பேசி உள்ளார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+