1.73 சீட்டுகளுக்கு 2.48 பேர் விண்ணப்பம்.. அரசு கலை, அறிவியல் கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முதல் நாளான இன்று நடைபெறுகிறது.
கடந்த மே 8 ஆம் தேதி தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.73 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலமாக கடந்த மே 8 ஆம் தேதி விண்ணப்பப்பதிவு தொடங்கியது. https://www.tngasa.in/ என்ற இணைய முகவரியில் ஏராளமான மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்காக கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தார்கள்.
1.73 லட்சம் இடங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1.15 லட்சம் மாணவர்களும், 1.28 லட்சம் மாணவிகளும், 3 ஆம் பாலினத்தவர்கள் 78 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ் மொழி படிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் ஒதுக்கப்பட்டது.
ஆங்கில மொழி கல்விக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண், மற்ற இளநிலை படிப்புகளுக்கு இதர 4 பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஜூன் 1 முதல் 10 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 ஆம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
ஜூன் 31 ஆம் தேதி கலந்தாய்வு நிறைவடைய இருக்கும் நிலையில், இதில் சீட் பெறும் மாணவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications