காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: இழுத்து செல்ல பெற்றோர் வந்ததால் தப்பி ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை பெற்றோர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் காயத்ரி, விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காதல் ஜோடி சேலையூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Couple escape from police station after parents arrived

அப்போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர் காயத்ரியை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயன்றர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து தங்களின் உயிரை காத்துக்கொள்ள அந்த தம்பதியர் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றது.

ஜாதி மாறி திருமணம்

ஜாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் போன்ற பல தலித் இளைஞர்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

தலித் இளைஞர் கொலை

ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், உடுமலை பேட்டையல் பட்டப்பகலில் சங்கர் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இளம் பெண் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடி தஞ்சம்

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை பெற்றோர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர் மிரட்டல்

சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் காயத்ரி. இவர், தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், இருவருக்கும் அவர்களது பெற்றோர் மூலம் மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் தஞ்சம்

இந்நிலையில், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, காதல் ஜோடி சேலையூர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த காயத்திரி பெற்றோர், அங்கு வந்து காயத்ரியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.

பெண் மறுப்பு

ஆனால் காயத்திரி பெற்றோருடன் வர மறுத்து, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனால் நான் வி விக்னேஷ் உடன் தான் செல்வேன், உங்களுடன் வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். ஆனாலும் இதை ஏற்காத பெற்றோர் காயத்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

தப்பி ஓட்டம்

காவல் நிலையத்தில், அதுவும் காவல்துறையினர் கண் எதிரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி, தங்களது உயிரை காத்துக்கொள்ள காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சினிமா காட்சி போல நடைபெற்ற இந்த சம்பவத்தால் சேலையூர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+