கோவையைச் சேர்ந்த கூரியர் நிறுவன உரிமையாளர் மாயம்.. பிப். 1 முதல் காணவில்லை
கோவை: கோவையைச் சேர்ந்த கூரியர் நிறுவன உரிமையாளரை பிப்ரவரி 1ம் தேதி முதல் காணவில்லை. அவர் எங்கு போனார் என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
அவரது பெயர் ஏ அறிவுமணி. 33 வயதாகும் இவர் கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை மாலை முதல் இவரைக் காணவில்லை. காணாமல் போனபோது இவர் ரோஸ் நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிந்திருந்தார்.
நல்ல உயரமுடைய இவர் காணாமல் போனது குறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் அறிவுமணி. இவர் கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அறிவுமணி காணாமல் போனது முதல் அவரது மனைவியும், 6 வயது மகளும் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். இவர் பற்றி தகவல் தெரிந்தால் கீழ்கண்ட எண்களில் தெரிவிக்கலாம்
சீனிவாசன் - 09886098909
வீரமணி - 9994890870, 9942617631