நடிகர் சங்கத்தைக் காணோம்.... வடிவேலு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கத்தைக் காணவில்லை என்று வடிவேலு பேசிய விவகாரத்தில் வருகின்ற 27 ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
நடிகர் சங்கத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு, விஷால் தரப்பினருக்கு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். அந்த நேரத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய வடிவேலு கிணற்றைக் காணோம் பாணியில் நடிகர் சங்கத்தைக் காணோம் என்று பேசியிருந்தார்.

நடிகர் வடிவேலுவின் இந்தப் பேச்சு சரத்குமார் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சங்கத்தை காணவில்லை என்று அவதூறாக பேசியதாக நடிகர் வடிவேலு மீது ராஜேந்திரன் என்பவர், நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வடிவேலுவை வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications