குற்றவாளிகளை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது... சங்கரின் மனைவி கவுசல்யா பேட்டி!
கணவர் சங்கரை கொலை செய்த குற்றவாளிகளைத் தான் தற்போது நீதிமன்றமும் குற்றவாளி என்று அறிவித்துள்ளதாக கவுசல்யா கூறியுள்ளார்.
Recommended Video

திருப்பூர் : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகளைத் தான் குற்றவாளி என்று கூறியுள்ளதாக கவுசல்யா கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு கல்லூரி மாணவியான கவுசல்யா, தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி சங்கரை நடு ரோட்டில் வைத்து வெட்டினர். இந்தக் கொடூர தாக்குதலில் சங்கர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், கவுசல்யா ஆபத்தான கட்டத்தை கடந்து உயிர் பிழைத்தார்.

தமிழகத்தையே அதிர வைத்த இந்த ஆணவக் கொலைக்கான ஆதாரங்கள் அருகில் இருந்த சிசடிவி காட்சிகள் மூலம் கிடைத்தது. கணவர் கொல்லப்பட்ட நிலையில் கவுசல்யா தொடர்ந்து கணவரின் வீட்டிலேயே வசித்து வருகிறார். தனது கணவரின் குடும்பத்தாரை அவர் தான் பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் சங்கர் கொலை வழக்கில் இன்று நீதிமன்றம் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட 11 பேரை குற்றவாளிகள் என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கவுசல்யா குற்றவாளிகளைத் தான் நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லி இருக்கிறது. முழு தீர்ப்பு வந்ததும் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications