குற்றவாளிகளை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது... சங்கரின் மனைவி கவுசல்யா பேட்டி!
கணவர் சங்கரை கொலை செய்த குற்றவாளிகளைத் தான் தற்போது நீதிமன்றமும் குற்றவாளி என்று அறிவித்துள்ளதாக கவுசல்யா கூறியுள்ளார்.
Recommended Video

திருப்பூர் : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகளைத் தான் குற்றவாளி என்று கூறியுள்ளதாக கவுசல்யா கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு கல்லூரி மாணவியான கவுசல்யா, தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி சங்கரை நடு ரோட்டில் வைத்து வெட்டினர். இந்தக் கொடூர தாக்குதலில் சங்கர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், கவுசல்யா ஆபத்தான கட்டத்தை கடந்து உயிர் பிழைத்தார்.

தமிழகத்தையே அதிர வைத்த இந்த ஆணவக் கொலைக்கான ஆதாரங்கள் அருகில் இருந்த சிசடிவி காட்சிகள் மூலம் கிடைத்தது. கணவர் கொல்லப்பட்ட நிலையில் கவுசல்யா தொடர்ந்து கணவரின் வீட்டிலேயே வசித்து வருகிறார். தனது கணவரின் குடும்பத்தாரை அவர் தான் பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் சங்கர் கொலை வழக்கில் இன்று நீதிமன்றம் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட 11 பேரை குற்றவாளிகள் என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கவுசல்யா குற்றவாளிகளைத் தான் நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லி இருக்கிறது. முழு தீர்ப்பு வந்ததும் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications