காதலுக்கு எதிர்ப்பு.. வெல்டரை "வெட்டிங்" செய்து போலீஸில் தஞ்சமடைந்த ஆசிரியை
கோவை: பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலில் திருமணம் செய்து கொண்ட வெல்டர் - ஆசிரியை காதல் ஜோடி பாதுகாப்பிற்காக போலீசில் தஞ்சமடைந்துள்ளது.
திருவாடனை ஆரியகுடியைச் சேர்ந்த விக்னேஷ் (25), பாலிடெக்னிக் முடித்து விட்டு வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரும் சத்யா என்ற ஆசிரியையும் காதலித்து வந்துள்ளனர்.
இந்தக் காதல் விவகாரம் சத்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தார் உடனடியாக சத்யாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதனால், கலக்கமடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை கோவை ஈச்சனாரி கோவிலில் திருமணமும் செய்து கொண்டனர்.
இன்று காலை கோவை ஈச்சனாரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோவை ஐ.ஜி அலுவலகத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர்.