ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாது: தா. பாண்டியன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீரங்1கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய தா. பாண்டியன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

CPI decides not to contest in Srirangam by-poll

ஸ்ரீரங்கத்தில் கோயில் நிலத்தில் குடியிருப்போர் வீடுகளை கையகப்படுத்த இந்துசம அறநிலையத்துறை முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து வரும் 16-ந் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூலாக ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்படி அவர் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+