ராஜ்யசபா தேர்தல்: ஜெவிடம் ஆதரவு கேட்டார் சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோடநாட்டில் இன்று சந்தித்து பேசினார்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருச்சி சிவா இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜனின் பதவி காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. மீண்டும் ரங்கராஜனை வேட்பாளராக நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது, ராஜ்யசபா தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications