தாது மணல் கொள்ளைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தாதுமணல் கொள்ளையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் தாதுமணல் கொள்ளையை கண்டித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தாதுமணல் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் மற்றும் தாதுமணல் ஆலைகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் குமாரவேல் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஆகியோர் தாதுமணல் ஆலைகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
இதில், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.












Click it and Unblock the Notifications