சென்னை அருகே சோப்பு ஆலையில் பங்கர விபத்து: பட்டாசு வெடித்து விழுந்ததால் தீ பிடித்தது- ஒருவர் பலி
சென்னை அருகே சோப்பு ஆலைக்குள் பட்டாசு வெடித்து விழுந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை : ஊரப்பாக்கத்த்தில் சிறுவர்கள் வெடித்த பட்டாசு சோப்பு ஆலைக்குள் விழுந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சோப்பு தொழிற்சாலை உரிமையாளர் பலியானார்.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்றும் பள்ளி விடுமுறை என்பதால் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடுவதைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர்ப்பகுதியான ஊரப்பாக்கத்தில் இயங்கி வரும் சோப்பு தொழிற்சாலைக்கு அருகில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர்.

இதில் ஒரு பட்டாசு ஆலைக்குள் வெடித்து விழுந்ததாகத் தெரிகிறது. இதில் ரசாயன ஆலைக்குள் இருந்த கெமிக்கல்கள் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சோப்பு ஆலையின் உரிமையாளர் விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சில தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீயை அணைப்பதற்காக தாம்பரம், மறைமலைநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்ப வாகனங்கள் வந்து தீணை அணைத்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே அனுமதியின்றி ரசாயன ஆலை இந்தப் பகுதியில் இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது. ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஊரப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications