For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுலோச்சனா சம்பத்தின் உடல் தகனம்... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: சொல்லின் செல்வர் என்று புகழப்பட்ட மறைந்த ஈ.வே.கி. சம்பத்தின் மனைவியார் சுலோச்சனா சம்பத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத். 86 வயதான சுலோச்சனா சம்பத் நேற்று மரணமடைந்தார்.

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்த சுலோச்சனா சம்பத்தின் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சுலோச்சனா சம்பத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், மதிமுகப பொதுச் செயலாளர் வைகோ, குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கி.வீரமணி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று சுலோச்சனா சம்பத்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புது ஆவடி சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

English summary
Late leader Sulochana Sampath's body was crematede in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X