சைக்கிள்கேப்பில்.. வேலையை காட்டிய விசிக நிர்வாகி.. ஸ்டேஷனுக்கு போகும்போதெல்லாம்.. கதறும் இளம்பெண்
விசிக நிர்வாகி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததால் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
தென்காசி: கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் ஒருவர், வழக்கறிஞரர் ஒருவர் மீது பாலியல் குற்றம் சாட்டி உள்ளார்.. புகாருக்கு உள்ளானவர், தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் என்பதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் வீரசிகாமணி அருகே அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி சிவகுருநாதன்.. 39 வயதாகிறது.. இவர் அரியநாயகிபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவராக உள்ளார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இவரது கிராமத்துக்கு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காசி சிவகுருநாதன் மீது புகார் தந்துள்ளார். இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர்.. ஆனால், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்... எனவே, எப்படியாவது தன்னை, கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி. காசி சிவகுருநாதனிடம் சொல்லி உள்ளார்.. இதுதொடர்பான விசாரணையும் புளியங்குடி மகளிர் ஸ்டேஷனில் நடந்து வந்துள்ளது.
ஸ்டேஷனுக்கு அந்த பெண் செல்லும்போதெல்லாம், கூடவே உதவிக்கு காசி சிவகுருநாதனும் சென்று வந்துள்ளதாக தெரிகிறது.. அதுபோன்ற நேரத்தில் இப்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தாராம் காசி சிவகுருநாதன். மேலும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், சேர்ந்தமரம் போலீஸில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின்பேரில் சேர்ந்தமரம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் வழக்கறிஞர் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது.. எனவே, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.. உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த விசிக பிரமுகரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அவர் சென்னையில் முக்கிய பிரமுகர் கஸ்டடியில் இருப்பதாகவும் ஒரு தகவல் வலம்வருவது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கோரிக்கை.. நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்கத்தினர்