For Daily Alerts
Just In
ஸ்ரீபெரும்புதூர்: ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர் யாதவ் என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை திடீரென யாதவ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விரைந்து வந்து யாதவ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிஆர்பிஎஸ் வீரர் யாதவ் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
English summary
A CRPF jawan on Tuesday allegedly committed suicide by shooting himself with his service rifle inside a Rajiv Gandhi memorial in Sriperumbudur in Kachipuram district of Tuesday.
Story first published: Tuesday, September 9, 2014, 17:18 [IST]