சென்னையிலுள்ள சந்திரபாபு நாயுடு நிறுவனம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு..4 பேர் கைது
சென்னை: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னையிலுள்ள ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் மீது குண்டு வீசிய தமிழ் அமைப்பினை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தில், செம்மரம் கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளிகளை சுட்டு பொசுக்கியது ஆந்திர போலீஸ். இதை எதிர்த்து தமிழகமெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ், நிறுவனங்களின் மீது தமிழகத்தில் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. அந்த கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
இந்நிலையில், சென்னை அயனாவரத்திலுள்ள ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் மீது நேற்று நள்ளிரவில் யாரோ பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இரவில் கடை பூட்டப்பட்டிருந்ததால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், குண்டு வீச்சு தொடர்பாக தமிழ் ஆதரவு இயக்கம் ஒன்றை சேர்ந்த, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications