கழுத்தை தனியே அறுத்த கொடூர கொலைகாரர்கள்- திண்டுக்கல்லில் “திடுக்” கொலை!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொட்டகை ஒப்பந்தக்காரர் ஒருவரின் கழுத்தை தனியே அறுத்து எடுத்து மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனி அருகில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கொட்டகை ஒப்பந்ததாரர் தொழில் செய்து வந்தார்.

இன்று இரவு 9 மணிக்கு இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு, மெயின் ரோட்டுக்கு பைக்கில் சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் பைக்கை வழிமறித்து கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை கொடூரமாக தனியாக அறுத்து எடுத்து சாலையில் வைத்துவிட்டு, உடலை பைக்கிலேயே சாய்த்துவிட்டு சென்றுவிட்டனர்.
கிருஷ்ணமூர்த்தியின் மகன் காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த காதல் திருமண விவகாரம்தான் கொலைக்கு காரணமா என்று கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications