முடிந்தது மீன்பிடித் தடைகாலம்.... 400 டன் மீன்களை அள்ளி வந்த கடலூர் மீனவர்கள் !
கடலூர்: கடலூரில் மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற சென்றவர்களுக்கு 400 டன்களுக்கும் அதிகமான மீன்கள் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீனகளின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 45 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். கடந்த 16 ஆண்டுகளாக மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை 45 நாள்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி, விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தடை காலத்தில் படகுகளை சீரமைத்தல், இயந்திரங்கள், மீன்பிடி சாதனங்களை பழுது நீக்குதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தடைகாலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம், சொத்திகுப்பம், சிங்காரதோப்பு, தாழங்குடா உள்ளிட்ட 40-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுமார் 3000-க்கு மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில், மீனவர்களின் வலைகளில் வஞ்ஜரம், சங்கரா, மத்தி, பாறை உள்ளிட்ட பலவகையான மீன்கள் சிக்கின. இதனையடுத்து கடலூர் துறைமுகத்திற்கு 400 டன்னுக்கும் அதிகமான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீன்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மீன் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications