கட்சி பார்த்து ஜே.சி.பி அனுப்ப மறுத்த மாவட்ட நிர்வாகம்- கடலூர் மக்கள் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
கடலுார்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலுார் நகராட்சி, மூன்றாவது வார்டு குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற அப்பகுதி கவுன்சிலர், நகராட்சி நிர்வாகத்திடம் ஜே.சி.பி., இயந்திரம் கேட்டுள்ளார்.

அவர் தி.மு.கவைச் சேர்ந்தவர் என்பதால் இயந்திரத்தை வழங்காமல் காலம் கடத்தியுள்ளனர் ஆளும் கட்சியினர். மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
ஆவேசமடைந்த மக்களும், கவுன்சிலரும் காலையில் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பின் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை உடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனராம் மக்கள்.












Click it and Unblock the Notifications