For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி பார்த்து ஜே.சி.பி அனுப்ப மறுத்த மாவட்ட நிர்வாகம்- கடலூர் மக்கள் அதிருப்தி

Google Oneindia Tamil News

கடலுார்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடலுார் நகராட்சி, மூன்றாவது வார்டு குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற அப்பகுதி கவுன்சிலர், நகராட்சி நிர்வாகத்திடம் ஜே.சி.பி., இயந்திரம் கேட்டுள்ளார்.

cuddalore people discontent with district officials

அவர் தி.மு.கவைச் சேர்ந்தவர் என்பதால் இயந்திரத்தை வழங்காமல் காலம் கடத்தியுள்ளனர் ஆளும் கட்சியினர். மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

ஆவேசமடைந்த மக்களும், கவுன்சிலரும் காலையில் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பின் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை உடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனராம் மக்கள்.

English summary
Cuddalore people discontent with district management on flood relief works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X