மனோரமா மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகை மனோரமா மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் வி.அன்பழகன் இதுதொடர்பாக விடுத்துள்ள செய்தி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் பிறந்து தமிழ் திரைப்பட உலகில் பல வேடங்களில் நடித்து, கின்னஸ் சாதனை செய்தவர்.

அவரது இயற்பெயர் கோவிந்தம்மாள் என்றாலும், ஆச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் மனோரமா. மூச்சு திணறல் காரணமாக 10 ம் தேதி இரவு காலமானார்.
நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து பொன்விழா கொண்டாடிய ஆச்சி மனோரமாவின் மறைவு, தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆச்சி மனோரமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications