50 நாள் பொறுத்துக்கொள்ள தயார்.. ரூ.15 லட்சத்தை எப்போது டெபாசிட் செய்வீர்கள்? லாலு கேள்வி
சென்னை: ரூ.15 லட்சம் எப்போது தருவீர்கள் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கப் போவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 கரன்சி நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

அவர், 2000 ரூபாய் கரன்சியை அறிமுகப்படுத்தியது ஏன் என பிரதமர் மோடி மீது நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. பிரதமர் மோடியின் நாடகத்தனமான பேச்சின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்க போவதில்லை. கடன் மோசடி செய்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சொகுசாக உள்ளனர்.
சாதாரண மக்கள் கால் கடுக்க வங்கிகளில் காத்து கிடக்கின்றனர். நீங்கள் நடத்தும் இந்த நாடகம் எல்லாம் வங்கியில் பல லட்சம் கோடி மோசடி செய்தவர்களை பாதுகாக்கத்தானே? வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் சேர்ப்பேன் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆனது? 50 நாட்களுக்கு சிரமத்தை பொறுத்துக் கொள்ளச் சொல்லும் மோடி, 50 நாட்களுக்குள் அதை கொண்டு வர முடியுமா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications