2 லாக்கரில் இருந்தது மட்டும்தான் கொள்ளை போயுள்ளது.. மற்றவை பத்திரமாக உள்ளது.. ஐஓபி வங்கி விளக்கம்
வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது என விருகம்பாக்கம் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: இரண்டு லாக்கரில் இருந்ததை தவிர மற்ற லாக்கர்களில் இருந்த வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகள் பத்திரமாக உள்ளது என விருகம்பாக்கம் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் 3 தளங்கள் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றனர்.
அப்போது அங்கே லாக்கர்கள் இருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வங்கி உயரதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.30 லட்சம் கொள்ளை
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் நகைகள் கொள்ளை போயிருப்பதை அறிந்தனர். லாக்கர் எண் 259 மற்றும் 654 இருந்த 30 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டது.

குவியும் வாடிக்கையாளர்கள்
ஆனால் வங்கியில் இருந்த மொத்த பணம் மற்றும் அனைத்து நகைகளும் கொள்ளை போனதாக தகவல் பரவியது. இதனால் பதறிய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

வதந்திகளை நம்பவேண்டாம்
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என விருகம்பாக்கம் ஐஓபி வங்கி விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகள் பத்திரமாக உள்ளது என்றும் விருகம்பாக்கம் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக உள்ளது
லாக்கர் எண்.259, 654ஐ தவிர்த்து மற்ற லாக்கர்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது. வங்கி விளக்கம் அளித்துள்ள போதும் மக்கள் தொடர்ந்து வங்கிக்கு குவிந்து வருகின்றனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications