வங்கக் கடலில் உருவாகி.. கன்னியாகுமரியை சூறையாடி.. அரபிக்கு ஓடிப் போன ஓகி!

வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தென்தமிழகத்தை சூறையாடிவிட்டு அரபிக்கடலுக்கு ஓடிவிட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குமரியை புரட்டிப்போட்ட மழை..தாண்டவம் ஆடிய ஓகி ..தென்கோடியில் என்ன நடக்கிறது?- வீடியோ

    சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக உருமாறி கன்னியாகுமரியில் களமாடியது. அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவுபகுதியில் கரையைக் கடக்கப் போகிறது ஓகி புயல்.

    வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. கன்னியாகுமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திலும் இலங்கையில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும் இருந்த அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.

    ஓகி என்று பெயரிடப்பட்ட அந்த புயல் நேற்று கன்னியாகுமரியை நெருங்கியது. கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டிருந்த போது கனமழை கொட்டித்தீர்த்தது.

    களமாடிய ஓகி புயல்

    களமாடிய ஓகி புயல்

    ஓகி புயலின் கோர தாண்டவத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    முடங்கிய குமரி

    முடங்கிய குமரி

    சூறைக்காற்றால் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்துள்ளன. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கை காரணமாகவே அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

    வெள்ளத்தில் போன பாலம்

    வெள்ளத்தில் போன பாலம்

    திருநெல்வேலியில் கொடுமுடியாறு அணை நிரம்பியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், நம்பியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    கரைபுரண்ட வெள்ளம்

    கரைபுரண்ட வெள்ளம்

    நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அங்குள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    விலகிப் போன ஓகி

    விலகிப் போன ஓகி

    புயலானது குமரிக் கடல் பகுதியில் இருந்து இன்று விலகிச் செல்லத் தொடங்கியது. மேலும் வலுப்பெற்ற புயல், தற்போது திருவனந்தபுரத்திற்கு மேற்கே 230 கி.மீ. தொலைவில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    லட்சத்தீவில் மையம்

    லட்சத்தீவில் மையம்

    தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் ஒக்கி புயல் தீவிர புயலாக வலுவடைந்து இன்று காலை 8.30 மணியளவில் லட்சத் தீவுகள் பகுதியில் உள்ள அமினிதிவி ((Aminidivi)) தீவில் இருந்து தென்கிழக்கே சுமார் 270 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக

    லட்சத்தீவில் சூறாவளியாக ஓகி

    லட்சத்தீவில் சூறாவளியாக ஓகி

    லட்சத்தீவு பகுதிகளில் ஓகி மையம் கொண்டுள்ளதால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகி புயல் டிசம்பர் 2 ஆம் தேதி நாளை கரையைக் கடக்கும் என்றும் அதன் பின்னர் வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    சூறையாடப்போகும் ஓகி

    சூறையாடப்போகும் ஓகி

    வங்கக் கடலில் உருவாகி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சூறையாடிய ஓகி புயல் லட்சத்தீவுகளில் கரையைக் கடக்கும் போது மிகமிக அதிக அளவில் கனமழையாக கொட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. ஓகி ஓடிப்போனாலும் தென்மாவட்ட அணைகளை நிரப்பிவிட்டு சென்றுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+