டி.ராஜா தனது மகளை சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு உத்தரவிட வேண்டும் - எச்.ராஜா
கோவை: தேச துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் தனது மகளை சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு டி.ராஜா உத்தரவிட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா, தேச துரோக செயல்களை ஊக்குவிக்கும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுசெயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர். டி.ராஜா ஆகியோர் இந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என குறிப்பிட்டார்.
கம்யூனிஸ்டுகள் தங்களை தேச பக்தர்கள் என கூறி கொள்கிறார்கள் ஆனால் டி. ராஜாவின் மகள் தேச விரோத போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். டி. ராஜா தனது தேச பக்தியை நிரூபிக்க தனது மகளை சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு உத்தரவிட வேண்டும் என எச். ராஜா கூறினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இதனை குறிப்பிட்டார். எச் ராஜாவின் கருத்துக்கு பதில் கூற டி.ராஜா மறுத்து விட்டார் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு பெரியார் மற்றும் கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை இழிவாக பேசியதாக எச் ராஜா மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது நினைவு கூறத்தக்கது. அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு பெயர் போன எச்.ராஜாவின் பேச்சு மீண்டும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜவின் மாணவரணியான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான கன்யாகுமார், இ.கம்யூனிஸ்ட் மாணவரணியைச் சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜாவின் மகளும் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். அவரும் கன்யாகுமாருக்கு ஆதரவாக போரட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications