எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் தாமதம் செய்வதால் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா ஆளுநரை சந்தித்து கடந்த 9ஆம் தேதி கோரிக்கை விடுத்தார். கோரிக்கை விடுத்தும் பெருன்பான்மை எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ள சசிகலாவுக்கு ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

இதனால் எரிச்சல் அடைந்த சசிகலா ஆளுநரையே மிரட்டும் வகையில் அறிக்கை வெளிட்டதோடு, ஓரளவுதான் பொறுமை காக்க முடியும் அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரித்திருந்தார். இருப்பினும் ஆளுநர் இதுவரை சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் போயஸ்கார்டனில் அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க சசிகலாவுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அவர் கூறினார். மேலும் ஆளுநர் தாமதம் செய்வதால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெறும் என்றும் சிஆர்.சரஸ்வதி குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications