For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலை அருகே பணத்துக்காக சிறுமியை கடத்தி கொன்றவருக்கு தூக்கு:மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவண்ணாமலை அருகே பணத்துக்காக சிறுமியை கடத்தி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: பணத்துக்காக சிறுமியை கடத்தி கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது நான்கு வயது மகள் பச்சையம்மாள்.

Death sentence to a farmer for killing 4 years old girl in Thiruvannamalai

பரமசிவத்துக்கும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற விவசாயிக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த 2013 ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற பச்சையம்மாளை விவசாயி மணிகண்டன் என்பவர் கடத்தி, கொலை செய்து கிணற்றில் வீசினார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மணிகண்டன் தான் சிறுமியை கொலை செய்தார் என்பது உறுதியானது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 4 வயது சிறுமியை கொன்ற விவசாயி மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

English summary
A farmer sentenced for death in the 4 years old girl murder case. A four years old girl killed by a farmer Manikandan on 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X