வெளுத்து வாங்கிய பருவ மழை.... சென்னையில் மட்டும் 11 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை புரட்டிப் போட்ட பருவமழைக்கு 11 பேர் பலியாகி உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை வெள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர் வளர்மதி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

Death toll touches 11 in Chennai

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 21 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 ஆயிரம் உணவு பொட்டலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

23, 500 மாநகராட்சி ஊழியர்கள், இரவு பகலாக வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 2,000 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

82 லாரிகள் மூலம் சென்னையில் மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. கனமழையால் சென்னையில் 11 பேர் பலியாகியுள்ளனர். 66 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு வளர்மதி கூறினார்.

விழுப்புரம், பூவிருந்தவல்லியில் 4 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் எட்டியாறு காட்டாற்று வெள்ளத்தில் 6 பேர் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதேபோல் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே திருமண பத்திரிகை கொடுக்க சென்றபோது கூவம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட அக்காள், தம்பி இருவரும் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+