சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர்கள் சடலம்: தென்காசியில் பதற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் சாக்குமூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கொலை செய்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தென்காசி அருகேயுள்ளது பாவூர் சத்திரம் இந்த ஊருக்கு வடக்கே குறும்பலாப்பேரி குளத்தின் கரையில் சாக்குமூட்டை ஒன்று மர்மமான முறையில் கிடந்துள்ளது. அந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாவூர் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் ஆடைகள் கலைந்த நிலையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள் கிடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சுரண்டை வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் மாரிசெல்வம், அவரது உறவினர். பரமசிவன் மகன் 10ஆம் வகுப்பு படிக்கும் முருகன் ஆகியோரை காணவில்லை என்று சுரண்டை போலீசில் கடந்த 1ஆம் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது போலீசுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவிக்கவே உறவினர்கள் சடலங்களை அடையாளம் காட்டினர். சடலங்களைப் பார்த்து உறவினர்களா கதறி அழுதனர்.
மாணவர்களுக்குள் ஏற்ப்பட்ட மோதல் காரணமாக நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த நெல்லை மாவட்ட எஸ்.பி நரேந்திரன் நாயார், குற்றவாளிகளை தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் போல்தான் தெரிகிறது. இது ஜாதீய மோதல்கள் அல்ல என்றும் அவர் கூறினார். இருப்பினும் வெள்ளக்கால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுக்கப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தொடர்கொலைகள் நடைபெற்றன. இது சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த நிலையில் வாலிபர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications