For Daily Alerts
Just In
வதந்திகளுக்கு பின்னால் சசிகலாவின் குடும்பம்.. தீபா பரபர குற்றச்சாட்டு
சென்னை: வதந்திகளுக்கு பின்னால் சசிகலா குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேவையில்லாத வதந்திகளை சிலர் பரப்புகின்றனர். வதந்திகளுக்கு பின்னால் சசிகலா குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பேரவையில் அதிமுக தொண்டர்கள் இணைந்து விடுவார்கள் என அச்சப்படுகின்றனர். எனக்கு எந்த குழப்பமும் கிடையாது. திடீரென என் கணவர் கட்சி தொடங்குவதாக கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதை சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. எனது கணவர் மாதவனை பின்னால் இருந்து சிலர் இயக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
jayalalitha sasikala j deepa madhavan rk nagar by poll 2017 தீபா rk nagar மாதவன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஜெயலலிதா சசிகலா
English summary
jayalalithaa's nice deepa Accusation on sasikla's family
Story first published: Saturday, March 18, 2017, 22:19 [IST]