ஜெ. சிகிச்சை அறிக்கைகளை ஏற்க முடியாது- நீதி விசாரணை தேவை: தீபா
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை ஏற்க முடியாது என்றும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீபா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது; முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் நேற்றைய அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஆரம்பத்தில் செப் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய அறிக்கையில் மூச்சு கோளாறு போன்ற காரணத்திற்காக மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் ஜெயலலிதா உணவு அருந்தினார், நடைபயிற்சி மேற்கொண்டார் ,தொலைக்காட்சி பார்த்தார் என வந்த தகவல்கள் எதுவும் உண்மையானவை என இதுவரை மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்படவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல்வேறு சந்ந்தேகங்கள் இந்திய அளவில் நிலவி வருகின்றது. இதை தெளிவு படுத்த வேண்டிய தமிழக அரசு குழப்ப நிலையில் உள்ளது.
முறையான நீதி விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு விளக்கம் தர வேண்டும். நேற்றைய மருத்துவ அறிக்ககள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தீபா வலியுறுத்தியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications