Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. சிகிச்சை அறிக்கைகளை ஏற்க முடியாது- நீதி விசாரணை தேவை: தீபா

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை ஏற்க முடியாது என்றும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீபா வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது; முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் நேற்றைய அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஆரம்பத்தில் செப் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Deepa demands Judicial probe on Jayalalithaa' death

நேற்றைய அறிக்கையில் மூச்சு கோளாறு போன்ற காரணத்திற்காக மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் ஜெயலலிதா உணவு அருந்தினார், நடைபயிற்சி மேற்கொண்டார் ,தொலைக்காட்சி பார்த்தார் என வந்த தகவல்கள் எதுவும் உண்மையானவை என இதுவரை மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்படவில்லை.

Deepa demands Judicial probe on Jayalalithaa' death

ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல்வேறு சந்ந்தேகங்கள் இந்திய அளவில் நிலவி வருகின்றது. இதை தெளிவு படுத்த வேண்டிய தமிழக அரசு குழப்ப நிலையில் உள்ளது.

முறையான நீதி விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு விளக்கம் தர வேண்டும். நேற்றைய மருத்துவ அறிக்ககள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தீபா வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+