For Daily Alerts
Just In
பிறந்தது தீபாவின்.. எம்.ஜிஆர் அம்மா தீபா பேரவை!
எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவை என்ற அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று எம்ஜிஆர்,- அம்மா- தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தீபா தொடங்கினார்.
இதுகுறித்து தி.நகரில உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி,
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான். துரோக கூட்டத்தினரின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம். எனது அரசியல் பயணம் தொடங்கியது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் நலனுக்காக பாடுபடுவேன். தமிழகத்தை ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவேன். என்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன் என்றார்.
பின்னர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவம் பொறித்த கருப்பு சிவப்புக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
Comments
English summary
Deepa has started new movement and released the Flag.
Story first published: Friday, February 24, 2017, 18:15 [IST]