என்னது, எடப்பாடி அணியில் இணைகிறாரா தீபா? பரபரப்பு பேட்டி
சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றத்துக்கு பின்னர் எடப்பாடி அணியில் இணைய தீபா தயாராகி வருவதாக தெரிகிறது.
திருச்சி: மக்களும் தொண்டர்களும் விரும்பினால் எடப்பாடி அணியில் இணைவது குறித்து பரிசீலனை செய்வேன் என்று தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத அதிமுக நிர்வாகிகள் குழுமியது தி.நகரில் உள்ள சிவானந்தம் சாலையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு முன்னால்தான்.
இந்நிலையில் அவருக்கு கூடிய கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஓஹோ என்றில்லாவிட்டாலும் ஓரளவுக்காவது முன்னுக்கு வருவார் என்று பலர் நினைத்திருந்தனர்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
இதைத் தொடர்ந்து சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதை தொடர்ந்து ஜெயலலிதா சமாதிக்கு ஓபிஎஸ்ஸும், தீபாவும் சொல்லி வைத்தாற் போல் ஒரே நேரத்தில் வந்தனர். அப்போது ஓபிஎஸ்ஸுடன் தானும் இரு கரங்களாக செயல்படுவோம் என்று தீபா தெரிவித்தார்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்துக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும் தீபா போகவில்லை. மாறாக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இதை தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் மும்முரமாகி வந்தன. ஆர்.கே. நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் என களைகட்டிய தீபாவின் அரசியல் பிரவேசம் சொந்த பிரச்சினைக்களால் முடங்கிவிட்டது.

கூண்டோடு அழித்தனர்
தீபாவின் செயல்பாடு, கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் ஆங்காங்கே தொடங்கப்பட்ட அமைப்பை கூண்டோடு நீக்கிவிட்டு ஓபிஎஸ் அணியிலும் பிற கட்சிகளிலும் இணைந்தனர். இதைத் தொடர்ந்து கிட்டதட்ட 9 மாதங்களுக்கு பின்னர் தீபா முதல்முறையாக பொது பிரச்சினைக்காக வெளியே வந்தார். நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொண்டர்கள் விரும்பினால்...
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா கூறுகையில் சசிகலா குடும்பத்தினர் திமுகவின் கைகூலிகள்தான். தொடக்கத்தில் இருந்தே திமுகவுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து நான் கூறியபோதெல்லாம் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, இப்போது காலம் கடந்து சசிகலா குடும்பத்துக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். மேலும் எடப்பாடி அணியில் இணைய வேண்டும் என்று மக்களும் தொண்டர்களும் விரும்பினால் அதுகுறித்து பரிசீலனை செய்வேன் என்றார் தீபா.
அப்போ! எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்னவாகும்?... கூண்டோடு கலைப்பா?
-
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications