தீபா பேரவையெல்லாம் ஆடிக்காத்தோடு போய்விடும்.. ஓபிஎஸ் ஒருவருக்கே ஆதரவு.. நிர்வாகிகள்
திண்டுக்கல் அருகே தீபா பேரவையை கூண்டோடு கலைத்துள்ள நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தீபா பேரவையை நிர்வாகிகள் கூண்டோடு கலைத்துள்ளனர். ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர்கள் சசிகலாவை எதிர்க்க தகுதியுடையவர் ஓபிஎஸ் ஒருவர் தான் என்றும் தெரிவித்தனர். மேலும் தீபா பேரவையெல்லாம் ஆடிக்காத்தோடு போய்விடும் என்றும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா அதிமுகவை அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என கூறிவரும் அதிமுக தொண்டர்கள் கட்சி அவர் குடும்பத்தின் வசம் சென்றதை ஏற்கவில்லை. இதையடுத்த நடை, உடை, பாவனை, கொண்டை என அனைத்திலும் ஜெயலலிதாவை சசிகலா காப்பியடித்ததால் எரிச்சல் அடைந்த தொண்டர்கள் ஜெயலலிதா சாயலில் இருந்த அவரது அண்ணன் மகள் தீபாவை அரசியலில் அத்தையின் இடத்தை நிரப்பும் படி கேட்டுக்கொண்டனர்.

அரசியலுக்கு வந்த தீபா
அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் பலப் பகுதிகளிலும் பேரவைகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் தனது பேரவைக்கு எம்ஜிஆர் அம்மா தீபா என பெயரிட்டு கொடியை அறிமுகப்படுத்திய தீபா அரசியலில் தடம் பதித்ததை உறுதி செய்தார்.

குடும்பத்தில் உண்டான கலகம்
இந்நிலையில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் மோதல் வெடித்தது. தீபாவின் பேரவையில் இருந்து விலகுவதாக அறிவித்த மாதவன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

சின்னாளப்பட்டியில் கலைப்பு
இந்நிலையில் ஜெ.தீபாவின் செயல்பாடுகள் அவரது கணவரின் தனிக்கட்சி உட்பட குளறுபடிகளை கண்டித்தும், திண்டுக்கல் மாவட்ட ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் கூண்டோடு பேரவையைக் கலைத்துவிட்டு ஓ.பி.எஸ். அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஆடிக்காத்தோடு போய்விடும்
இதுகுறித்து சின்னாளபட்டி அதிமுக அவைத்தலைவர் கே.சக்கரபாணி கூறுகையில் சசிகலாவை எதிர்ப்பதற்கு தகுதிவாய்ந்தவர் ஓ.பி.எஸ் ஒருவரே. தீபா பேரவையெல்லாம் ஆடிக்காத்தோடு போய்விடும்.

ஆதரிக்க வேண்டியவர் ஓபிஎஸ்
நிரந்தரமாக அதிமுக தொண்டர்கள் ஆதரிக்க வேண்டியவர் ஒ.பி.எஸ் ஒருவரே. அதனால்தான் நாங்கள் தீபா பேரவையை கலைத்துவிட்டு எங்கள் ஆதரவை ஓ.பி.எஸ் அணிக்கு தெரிவித்துள்ளோம்.

விரைவில் மாவட்டம் முழுவதும் கலைப்பு
விரைவில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தீபா பேரவை நிர்வாகிகள் ஓ.பி.எஸ் அணிக்கு மாறுவார்கள் என்றார். ஏற்கனவே பல்வேறு இடங்களில் தீபா பேரவை கலைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தீபா பேரவை கூண்டோடு கலைக்கப்பட்டிருப்பது தீபா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications