ஓட ஓட விரட்டியடியுங்கள்.. ஆர்.கே.நகரில் கொந்தளித்த தீபா!
சென்னை: ஜெயலலிதா பெயரைச் சொல்லிக் கொண்டு யாராவது வந்தால் அவர்களை ஓட ஓட விரட்டியடியுங்கள் என்று தீபா திடீர் கொந்தளிப்பைக் காட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்டோவில் அமர்ந்து கொண்டு பேசும்போது அதாவது பிரசாரம் செய்தபோது இவ்வாறு கூறினார் தீபா. ஆனால் இப்படிச் சொல்வதற்கு முன்பும், சொல்லிய பின்பும் ஜெயலலிதா பெயரை அடிக்கடி உச்சரித்துப் பேசினார் என்பது சுவாரஸ்யமானது.
புது வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று தீபா பிரசாரம் செய்து பேசினார். தீபாவின் தீப்பொறி பேச்சிலிருந்து சில உங்களுக்காக:

பதவி ஆசையில்
இங்கு பதவி ஆசையில் சிலர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஜெயலலிதா பெயரைக் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஜெயலலிதா என்ற மாபெரும் மக்கள் தலைவர் நின்று வென்ற இத்தொகுதியில் யாரை வைத்து அழகு பார்ப்பது என்று உங்களுக்குத் தெரியும்.

தப்புக் கணக்கு
ஜெயலலிதா பெயரைக் கூறி அனுதாபத்தை சம்பாதித்து அதில் வாக்குகளை சேகரித்து விடலாம் என்று சிலர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி மக்களே ஏமாந்து விடாதீர்கள்.

விரட்டியடியுங்கள்
ஜெயலலிதா பெயரை கூறிக் கொண்டு யாராவது வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள். ஓட ஓட விரட்டியடியுங்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.

எனக்கு ஓட்டுப் போடுங்கள்
ஜெயலலிதாவின் சபதங்கள் நிறைவேறிட, அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட, எனது கரத்திற்கு வலு சேருங்கள். எனக்கு வாக்களியுங்கள். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் தீபா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications