டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - 'விளாசும்' தீபா! - வீடியோ
பணப்பட்டுவாடா செய்து ஆர்கே நகரில் தேர்தல் ரத்தாகக் காரணமான டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தீபா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்து தேர்தல் ரத்து செய்ய காரணமானவர் தினகரன். ஆகையால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார்.
ஆர்கே நகரில் அதிமுக அம்மா அணியினர் பணப்பட்டுவாடா செய்ததையடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா, 28 கோடி ரூபாய் அந்நிய செல்வாணி வழக்கில் அபராதம் கட்ட வேண்டியா தினகரனை வேட்பாளர் என அங்கீகாரம் அளித்ததே தவறு. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் தேர்தலில் 6 ஆண்டுகள் நிற்கக் கூடாது என தடைவிதிக்க வேண்டும்.

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்து தேர்தல் ரத்தாகக் காரணமானவர் தினகரன். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்மூலம், சசிகலா நடத்தும் ஆட்சி ஊழல் ஆட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆர்கே நகர் தேர்தல் ரத்தானதை வரவேற்கிறேன் என தீபா கூறினார்.












Click it and Unblock the Notifications