தொடரும் கனமழை - ரோட்டுக்கு வந்த புள்ளிமான்கள்!
நெல்லை: நெல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வன விலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வர தொடங்கியுள்ளன. இச்சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் உள்ளனர்.
நெல்லை - மதுரையில் அமைந்துள்ளது கங்கைகொண்டான் மான் பூங்கா. இந்த மான் பூங்காவில் ஆயிரக்கணக்கான மான்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது.
இதனால் கங்கைகொண்டான் மான் பூங்காவில் இருந்து வெளியேறிய பல மான்கள் அந்த வழியாக வந்து நெல்லை பல்கலை கழக வாளகம் முழுவதும் புதரில் வசித்து வந்தன.

இலைதழை உணவுகள்:
அங்குள்ள இலை, தாழைகளை தின்று விட்டு அப்பகுதியில் கிடைக்கும் நீரை அருந்தி விட்டு அங்கேயே தங்கி விட்டன. இப்படி தங்கியிருக்கும் மான்கள் பல நேரங்களில் நெல்லை-தென்காசி சாலைக்கு வருவது வழக்கம்.

கொட்டும் கனமழை:
அப்போது சாலையில் செல்லும் வாகனங்களால் அடிபட்டும், நாய்கள் கடித்தும் பல மான்கள் இறப்பது வாடிக்கையாகி வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

சாலையில் சுற்றும் மான்கள்:
இந்த மழையால் நெல்லை பல்கலைக் கழக வளாகம் முழுவதும் வெள்ளம் போல மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பல்கலைக் கழகத்தின் பின் பகுதியிலும், அபிஷேகப்பட்டி கால்நடை பண்ணையிலும் வசித்து வந்த புள்ளிமான்கள் தற்போது நெல்லை-தென்காசி சாலையோரம் சுற்றி திரிகின்றன.

கூட்டம் கூட்டமாக “ரோமிங்”:
நெல்லை-தென்காசி சாலையில் கண்ணுக்கு புலப்படும் தூரத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக இரை தேடி வருகின்றன. இந்த வழியாக செல்வோர் மான்களின் கூட்டத்தை ரசித்து வருகின்றனர்.

பயணிகள் மகிழ்ச்சி:
வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் மான்கள் காண கிடைக்கும். இந்த நிலையில் தென்காசி சாலையில் மான்கள் துள்ளி குதித்து விளையாடுவது காண்பேரை மகிழ்ச்சி அடைய செய்து வருகிறது.

சமூக ஆர்வலர்களின் கவலை:
அதே நேரம் இந்த மான்கள் வாகனங்கள் அடிபடாமல் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகி்ன்றனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
குடும்பக் கௌரவம் என்ற போலி பிம்பம்.. நெல்லையில் 23 வயது பெண்ணுக்கு தம்பியால் நடந்த முட்டாள்தனம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications