மகாத்மா காந்தி 'பிரிட்டி ஏஜெண்ட்': கட்ஜு மீது தமிழருவி மணியன் அவதூறு வழக்கு!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என விமர்சித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை எழும்பூர் 10-வது குற்றவியல் நீதிமன்றத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சார்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தன்னுடைய சமூக வலை தளத்தில் மகாத்மா காந்தி குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications