செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் முத்துவேலுவை நீக்க தமிழர் எழுச்சி இயக்கம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதிவாளராக இருக்கும் மு.முத்துவேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து இருந்துவரும் நிலையில் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய் தமிழர் எழுச்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்த அமைப்பு முதல்வர் ஜெயலலிதா, உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது முத்துவேலுவை உடனடியாக நீக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவெடுத்துள்ளது.

சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் பணியாளர் மீது சாதிய பாலிய வன்கொடுமை செய்ததோடு நின்றிடாமல்... 2013ஆம் ஆண்டு முதல் அயல்பணி கால நீட்டிப்பிற்கான அரசு ஆணையும்.. இந்நிறுவன தலைவரான தமிழக முதல்வரின் ஒப்புதல் ஆணையும் பெறாமல்.. செம்மொழி நிறுவனப் பதிவாளராக பணியமர்த்தம் செய்யப்பட்ட மு.முத்துவேலுவை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.

Demand to sack CTCRC registrar

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துப் பணி நீக்கம் செய்யவும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குநரை தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் ப. வேலுமணி 13-8-2014 அன்று மாலை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

அப்போது அவருடன், சென்னை மாவட்டச் செயலர் வெ.குமரவேல், காஞ்சி மாவட்ட செயலர் ப. கண்ணன் மற்றும் வின்னரசு, பின்னி, சரவணன் ஆகிய அமைப்புத் தோழர்களும் சென்றிருந்தனர். மேலும் தமிழின உணர்வாளர்களும் கோரிக்கை மனு அனுப்பி செம்மொழி நிறுவனத்தை காப்பாற்ற வேண்டுகோளும் வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+