சென்னை வியாபாரி குடும்பமே கொலைக்கு காரணமே ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புதான்- திடுக் தகவல்
சென்னை பல்லாவரம் அருகே துணி வியாபாரி குடும்பத்தினரை வெட்டிக்கொன்று தற்கொலை செய்துகொண்டதற்கான திடுக்கிடும் காரணங்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை: பல்லாவரம் அருகே துணி வியாபாரி குடும்பத்தினரை வெட்டிக்கொன்று தற்கொலை செய்துகொண்டதற்கான திடுக்கிடும் காரணங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
தாமோதரன் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது உறவினருக்கு போன் செய்த தாமோதரன் தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவத்துள்ளார்.

ரத்தவெள்ளத்தில் குடும்பத்தினர்
இதையடுத்து உறவினர் பதறியடித்துக்கொண்டு வீட்டில் வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் தாமோதரனின் இரண்டு குழந்தைகள் அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

உடல்களை கைப்பற்றிய போலீஸ்
தாமோதரனும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

5 பக்க கடிதம்
ஆனால் சென்னை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட தாமோதரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தாமோதரன் எழுதி வைத்த 5 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
அதில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ரூ500, ரூ1,000 செல்லாது நடவடிக்கையால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை கொன்று..
மேலும் ஜிஎஸ்டியும் தொழிலில் நஷ்டம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்ததாக அந்த கடிதத்தில் தமோதரன் தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்தினரை கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு தாமோதரனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

5 பேர் பலி - அதிர்ச்சி
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விரக்தியடைந்த துணிக்கடை வியாபாரி குடும்பத்தினரை கொன்று தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் பம்மல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications