ரூபாய் நோட்டு செல்லாது.. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நவ. 28ல் இடதுசாரிகள் போராட்டம்
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை எதிர்த்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை: மோடி அரசு கொண்டு வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து வரும் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியா முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கி வாசல் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். சிறு, குறு நிறுவனங்கள், தொழில்கள், பெரும் வர்த்தகங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவக் காரணமாக இருந்த மத்திய அரசையும் பாஜகவையும் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், வரும் 28ம் தேதி அன்று கண்டன நாள் அனுசரிப்பு தினமாக எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications